Thursday, 21 December 2023

புத்தகம்

பல வண்ணங்களில் நீ இருக்கிறாயே(அட்டை வண்ணம்) 
பஞ்சவர்ண கிளியா!
வானவில்லா!
நவ ரத்தினமா!
எந்த வண்ணம் கொண்டு உன்னை அறிவேன் 
உன் வண்ணம் தான் நீயா இல்லை வேறா 
உன் முகம் கண்டு அறிவேனா(முகவுரை) 
இல்லை மனம் காண வேண்டுமா
உன்னை தொடுவதற்கே அச்சம் எனக்கு
என்னை எங்கு கொண்டு சேர்ப்பாயோ(எல்லையில்லாத கற்பனை, அறிவு) 
உன் முகம் கண்டு மனம் காண ஆசை தான் எனக்கு (முக்கிய கருத்துக்கள்) 
உன் மனதை அறிந்துவிட்டாலும் தீராது எனது ஆசை
மேலும் உன்னுடன் பயணிக்க அழைக்கிறது
உன்னோடு நானும் என்னோடு நீயும்(புத்தகம் வழியாக அறிவை பெற) கரையில்லா விரி வானம் காண